Friday, March 13, 2009

சிரிப்பு

சின்னாவைத் தெரியும்தானே..?!!!

சின்னாவோட பக்கத்து வீட்டு அங்கிளுக்கும் ஆன்ட்டிக்கும் ஒரு குழந்தை பொறந்துச்சு.. புள்ள நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா.. ரெண்டு காது மட்டும் இல்ல..! :(

அந்தக் குழந்தையைப் பார்க்க சின்னாவோட அப்பா அம்மா போனாங்க.. வில்லங்கத்தை வெலை கொடுத்து வாங்கினது போல, சின்னாவையும் கூட்டிட்டு போனாங்க.. இருந்தாலும் அப்பா சொன்னார்..

"சின்னா.. அங்க வந்து புள்ளைக்கு காது இல்லையேன்னு ஏதாவது சொன்னே.. மவனே... உனக்கு சங்குதான்.. புரிஞ்சுதா..?"

சின்னா புரிந்ததாக தலையாட்டினான்.. அப்புறம் எல்லோரும் போய் பக்கத்து வீட்டுப் பிள்ளையைப் பார்த்தாங்க.. சின்னா பக்கத்து வீட்டு ஆன்ட்டியை கேட்டான்..

ஆன்ட்டி.. உங்க பேபி ரொம்ப க்யூட்.. !

தேங்க்ஸ் சின்னா..!

அழகான கண்கள்..!

தேங்க்ஸ் சின்னா..!

ஏன் ஆன்ட்டி.. பாப்பாக்கு கண் நல்லா தெரியும்தானே..?

ஆமாம் சின்னா.. பார்வை ரொம்ப நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னார்..!

ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறான் என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சின்னா வெடிகுண்டை வீசினான்..

"நல்லதாப் போச்சு ஆன்ட்டி..! இல்லேன்னா பார்வைக் கோளாறு இருந்தா.. கண்ணாடியை எங்க மாட்டித் தொலைக்கறது...?!!!"
___________________________

மொக்கையைத் தெரியும்தானே..?!!!

மொக்கை ஒருநாள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்..அப்போ.. அந்தவழியா சின்னா வந்தான்.. மொக்கை சொன்னார்.. ராஜா.. இதோ வரானே ஒரு பொடியன்.. இவனைப் போல ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லே.. இப்போ பாரேன்..!

மொக்கை சின்னாவைக் கூப்பிட்டு கேட்டார்.. "சின்னா .. உனக்கு 50 ரூபாய் வேணுமா..? 5 ரூபாய் வேணுமா..?

5 ரூபாய்தான் வேணும் அங்கிள்..!

சின்னா 5 ரூபாயை வாங்கிட்டு போயிட்டான்.. மொக்கை வெற்றிச் சிரிப்பு சிரித்தார்.. !

அப்புறம் நான் சின்னாவை கடைத்தெருவில் பார்த்தேன்..

ஏன் சின்னா.. 50 ரூபாய்தான் பெருசுன்னு உனக்குத் தெரியாதா..? ஏன் இப்படி செய்தே..?

5 ரூபாய் ஐஸ்கிரீமைச் சுவைத்தபடியே சின்னா சொன்னான்..

50 ரூபாய்தான் பெருசுன்னு எனக்குத் தெரியும் அங்கிள்.. நான் 50 ரூபாய்தான் வேணும்ன்னு கேட்டிருந்தா விளையாட்டு அன்னைக்கே முடிஞ்சு போயிருக்கும்..! இப்போ பாருங்க.. இது 240-வது 5 ரூபாய்.. மொக்கையைப் போல ஒரு முட்டாள் மாமாவை நான் பார்த்ததே இல்ல........!!!!!!!
அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

தெரியலையே!

வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.



ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

அதே வாட்சா?

இல்லே, காவேரி.


நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

அதிசயமாயிருக்கே!

காரணம். அவன்தான் அவ புருஷன்.


எனக்கு லேட் மேரேஜ்!

காலங்கடந்த வயசிலே கல்யாணமா?

அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!



காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

காதலன் : லட்டு, ஜிலேபி.



ஒருவர் : வாங்க, வாங்க!

மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!




சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க
பார்ப்போம்!

தெரியாது!

சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.



தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது.
இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
மொக்கை வேலை கேட்டுப் போன இடத்தில்..

ஏன் முன்ன பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டீங்க..?

என் மனசுக்கு பிடிக்காத வேலையை செய்யச் சொன்னாங்க... முடியாதுன்னு சொன்னேன்.. நீக்கிட்டாங்க..

அப்படி என்ன செய்யச் சொன்னாங்க..?

ஒழுங்கா நீயாவே ரிசைன் பண்ணிடுன்னு சொன்னாங்க..!

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

முதலாளி தன் மேலாளரிடம்...

ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..?

அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

ஒரு ஜவுளிக் கடையில்..

டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க..

சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

மொக்கையின் மகனிடம் வகுப்பு ஆசிரியர்..

அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருக்கே சின்ன மொக்கை.. இதே போல ஆண்டுத் தேர்வுலயும் மார்க் எடுக்கணும்..

அது கொஞ்சம் கஷ்டம்தான்.. அந்த வினாத்தாள் எங்க அப்பா வேலை செய்யற அச்சகத்தில பிரிண்ட் பண்றாங்களோ என்னவோ..?

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

மொக்கை : சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?

ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்.. !

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

நம் மொக்கை ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர்.. ஒரு பயணி வாயில் சிகரெட்டும் கையில் தீப்பெட்டியையும் வைத்திருந்ததைப் பார்த்து..

மிஸ்டர்.. ரயில்பெட்டியில் புகை பிடிப்பது குற்றம் தெரியுமா..?

அப்படியா..? ஆனா நான் புகை பிடிக்கலை.. இதோ பாருங்க.. இந்த சிகரெட்ட இன்னும் பத்த வைக்கலை..

அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.. நீ வாயிலே சிகரெட் வச்சிருந்ததை நான் பார்த்தேன்..

ஹா.. ஹா.. நான் காலில் ஷூ கூடதான் போட்டிருக்கேன்.. ஆனா நடக்கிறேனா..? சும்மாதானே உக்காந்திருக்கேன்..? அப்படிதான் இதுவும்..!

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம ஆபீசுக்கு புதுசா ஒரு 'சைட்' வந்திருக்கு!''

''என்ன வயசிருக்கும்?''

''அடப்பாவி... நான் சொன்னது 'வெப்சைட்'ரா!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'கண்ணா! அப்பா மாதிரி பெரிய ஆளா வளர்ந்ததும்
நீ என்னவாக ஆசைப்படறே?''

''அப்பாவாக ஆசைப்படறேன்!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

''எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கலை...!''

''ஏன்...?''

''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'' அந்த ஜோசியர் போலின்னு எப்படிச் சொல்றே?''

''என் ராசிப்படி இந்த வாரம் எப்படியிருக்கும்னு கேட்டா,
'ஏழு நாட்கள் கொண்டதா இருக்கும்'னாரே..''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

''ஊர்லேர்ந்து எங்க மாமியார் வந்துட்டுப் போறப்ப... வாசல்
வரைக்கும் போய் வழியனுப்பி வைப்பேன்...''

''ஏன்... மாமியார் மேல அவ்வளவு மரியாதையா?''

''ஐயோ அதில்லே... இல்லைன்னா நைஸா என் செருப்பை
போட்டுகிட்டுப் போயிடுவாங்க!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

''சாவுல கூட நாம பிரியக்கூடாது ரோஹிணி...''

''அந்தளவுக்கா நான் பாவம் பண்ணியிருக்கேன்?''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

''அயல்நாட்டு ஓலையைப் படிச்சுட்டு மன்னர் அப்செட் ஆனது ஏன்?''

''தயவுசெய்து புறாவைத் திருப்பி அனுப்பி விடவும்'னு பின்குறிப்பு
எழுதி இருந்துச்சாம்!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

''எங்க ஊர் பாகவதர் சொன்ன மாதிரியே மழை கரெக்டா பெய்ஞ்சுது!''

''அப்ப, அவரைப் பாக'வெதர்'னு சொல்லு!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி :அரசர்...!

1 comment:

Gajen Dissanayake said...

பின்வரும் ஜோக்குகள்.....

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு....... ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

அதே வாட்சா....?

இல்லே, காவேரி...

**********************************
'கண்ணா! அப்பா மாதிரி பெரிய ஆளா வளர்ந்ததும் நீ என்னவாக ஆசைப்படறே?''

''அப்பாவாக ஆசைப்படறேன்!''
***************************************

''எங்க ஊர் பாகவதர் சொன்ன மாதிரியே மழை கரெக்டா பெய்ஞ்சுது!''

''அப்ப, அவரைப் பாக'Weather' னு சொல்லு!''

சூப்பர் சார்...வயிறு குலுங்கிடுச்சு...!