Monday, July 20, 2009

இன்னும் நமக்குள் இறங்கி பார்க்கவில்லை.....!!!!

இது ஒரு விஞ்ஞான கட்டுரை, மெய்ஞானம் மிகுந்திருந்த காலத்தில் புத்தர்களும் சித்தர்களும், பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை அறிந்திருந்தனர். மனிதன் இயற்கை சக்தியால் படைக்கபட்டவன்..

இயற்கை என்பது பால் மனம் மாறா குழந்தை போன்றது, சூது வாது அறியாதது பள்ளம் மேடு, பாலை, குளிர் சோலை என வேறுபாடு அறியாதது சோலை வனத்திலும் அனைத்து உயிரினத்திற்கும் அனைத்தும் வைத்தாள், பாலை வனத்திலும் அனைத்தும் அனைவருக்கும் தந்தாள். இதே காரணத்தால் தான் இன்றும் நாம் இயற்கையை அன்னை என்கிறோம்.

--------------------------------------

வீர்ர்ர்ர்ரும் தனது தலைமேல் தாள பறந்து சென்ற ஜெர்மானிய தயாரிப்பு ஒரு இருக்கை குட்டி விமானம் பறந்து சென்றது. அந்த சிறுவன் விடுமுறை நாட்களில் முதல் முறையாக டெக்ஸாஸில் உள்ள தனது சிறிய தந்தையின் தோட்டத்திற்கு வருகை தந்திருந்தான், விமானத்தை கண்டதும் அதன் பின்னே ஓட ஆரம்பித்தான், அவனது சிறிய தந்தையின் தோட்டத்திற்கு அருகில் இருந்த வேறோரு தோட்டத்தில் அந்த விமானம் இறங்கியது. ஆர்வத்துடன் அதை தொட்டு பார்க்கிறான். அதற்குள் அவனது சிறிய தந்தை அங்கு வருகிறார். விமான ஓட்டியிடம் தனது அண்ணனின் பையன் நீல் என அறிமுக படுத்தி வைக்கிறார்.

நீலின் சிறிய தந்தையான பீட்டர் ஹென் ஒரு தீவிர கத்தோலிக்கர்(நம்ம ஊர் பஜ்ரங்தள் போல்) நீல் அவரிடம் கேட்கிறார், டாட் நானும் பறக்கனும் , அதற்கு அவர் எச்சரிக்கிறேன், கடவுள் நம்மை பறக்க வைக்கவேண்டும் என்றால் இறகுகள் தந்திருக்க வேண்டும் என்றார் அதற்கு நீல் நமக்கு மூளையை கொடுத்திருக்கிறாரே என்றார், அது இயற்கையால் (கடவுளால்) படைக்கபட்ட அத்தனையும் நாம் சீர் பட பாதுகாக்கவேண்டும் என்பதற்காவே அன்றி நாம் அதை சீண்டி பார்ப்பதற்காக அல்ல என்றார்.

வருடங்கள் கழிந்தன நீல் தனது கனவான பறக்க வேண்டும் என்பதை நிறைவேற்றி இருந்தார், டெக்ஸாஸ் விமான பயிற்சி கழகத்தில் இருந்து விமான ஓட்டுனர் உரிமம் பெற்று இருந்தார். முதலில் ஹென்றியிடம் இதை தெரிவித்தார். அதற்கு ஹென்றி நீ என்ன செய்தாலும் சரி ஆனால் இயற்கையில் சக்தியை சோதிக்க நினைக்காதே என்றார்.

ஜான் F கென்னடி மே மாதம் 25-ம் தேதி வருடம் 1961 " நாம் (மனித குலம்) விரைவில் சந்திரனின் கால் பதிக்கும் அதுவும் நாம் வசிக்கும் பூமி போன்ற ஒரு கிரகனம், அந்த கிரகனத்தில் இறக்கும் நாம் எதிர்காலத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஆளும் காலம் வெகுதூரமில்லை, நிலவிற்கு சென்ற நாம் பத்திரமாக பூமிக்கு திரும்பி அந்த வரலாற்று வெற்றியை கொண்டாட வேண்டும்" என்று அமேரிக்க காங்கிரஸில் கூறினார்.

1965- நீல் ஆம்ஸ்டர்டம் நிலவிற்கான பயணத்திற்காக நாசாவினால் தேர்தெடுக்க படுகிறார். அவரது சிறிய தந்தை கத்தோலிக்க பாதிரியாக பட்டம் பெறுகிறார்.

தனது வளப்பு மகன் நிலவிற்கு செல்ல போகிறான் என்றதும் அவர் கூறிய வார்த்தை" இந்த உலகம் இறைவனால் படைக்க பட்டது, இந்த உலகில் இருக்கும் அனைத்தும் மனிதர்களுக்கு சொந்தமே ஆகும், நாம் இயற்கையுடன் கலந்து வாழும் போது இயற்கை நமக்கு நன்மை தரும் அதை வஞ்சிக்கும் போது அது கோபப்படும், நீல் நிலவிற்கு செல்கிறான். இது மனித குலத்தில் ஒரு வரலாற்று செய்தி ஆனால் இறைவனால் பாதுகாப்பட்ட இந்த பூமீயை கிழித்து கொண்டு மனிதன் நிலவை அடைவான் இது வினை ஆனால் இதன் எதிர் வினை என்ன யாராவது சிந்தித்தார்களா?? இதோ மனிதன் பிறக்கிறான், வளர்கிறார், முதுமை அடைகிறான், இறந்து விடுகிறான். இந்த நான்கு கட்டத்திற்குள் மனிதனின் வாழ்க்கை இதை நிலவுக்கு செல்வதால் மாற்றமுடியுமா??



வேதனையுடன் கூடிய துர்மரணமும், இழப்பின் காயத்தை உயிர்வுள்ள வரை சுமக்கும் மனிதர்கள் சிந்தைனை செய் என்றார்.





ஜூன் 1969 ஜான் கென்னடி வின்வெளி ஆய்வு மையத்தில் நிலவிற்கான பயணத்தின் வாகனம் பொருத்த பட்டது. நீலின் குடும்பம் தீவிர கத்தோலிக்கர்கள் இருப்பினும் தனது குடும்பத்தில் ஒருவர் நிலவில் இறங்கபோகிறார் என்றதும் மனதில் பாதி சந்தோசமும் இதனால் என்ன நிகழும் என்ற ஒரு வித அச்சமும் மனதில் ஏற்பட்டு கொண்டே இருந்தது.

16- ஜூலை 1969 நிலவின் பயணம் துவங்கியது,

"மனித குலம் முதல் முதலில் தனது பிறந்த மண்ணை விட்டு புதிதான ஒரு உலகிற்கு பயணமாகிறது"
உலகில் உள்ள அனைத்து பிரபல பத்திரிக்கைகளுமே இதை தலைப்பாக போட்டு இருந்தன. ஆனால் இயற்கையின்ஆர்வலர்கள் இதை ஒரு அச்ச உணர்வோடு பார்க்க துவங்கினர்.

வானில் இறை தேடி வட்டமிடும் கழுகை போல் புவி வட்டத்தை வலமிருந்து இடமாக* ஒரு முறை வட்ட மிட்ட அப்பல்லோ 11 சரியாக 3 நாட்கள் கழித்து நிலவின் வட்டப்பாதையில் சஞ்சரித்தது. முதலிலேயே அனுப்பபட்ட மனிதர்கள் இல்லாத விண்கலம் இறங்கிய பகுதியிலேயே வின்கலத்தை இறக்க முடிவு செய்ய பட்டது.

அமேரிக்க நேரப்படி ஜூலை மாதம் 20-ம் தேதி 20:17 நிமிடத்திற்கு நிலவில் நிலை கொண்டது. 6 மணிநேரம் நிலவின் வெளிப்பகுதியின் கால நிலைகளை சோதனை செய்த பிறகு நீல் அம்ஸ்டர்டம் தனது வின்வெளி கவசஉடை அனிந்து கொண்டு நிலவில் கால் தடம் பதித்தார். சுமார் 34 நிமிடம் நிலவில் சுற்றித்திரிந்த நீல் ஆம்ஸ்டர்டாம் மனிதன் நிலவில் சென்றதன் நினைவாக கல்வெட்டு ஒன்றை பதித்தார். தாமிர தகடால் ஆன

அதில் பூமியில் இருந்து மனிதன் அமைதியை நோக்கிய பயணத்தில் என்று எழுதி இருந்தது. அமைதியில்

சின்னமான ஒலிவ இலை கிளை ஒன்றும் நட்டு வைத்தார். 34 நிமிட வரலாற்று நடை நடந்த அவர் இந்த சில நடைக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் நடந்து வந்துள்ளது என்றார்.

நீல் மற்றும் அவரது தோழர்கள் 24- ம் தேதி பூமியில் மீண்டும் வந்து இறங்கினார். ஒரு முறை மெக்சிகோ சிட்டியில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் அவரிடம் கேட்ட கேள்வி நீங்கள் நிலவிற்கு சென்றதற்காக பெருமை படுகிறீர்களா??, அதற்கு நீல் அமைதியாக நான் நிலவில் காலடி பதித்தது என் மனம் முழு சந்தோசமும் அடைய வில்லை, மனிதன் நிலவில் இறங்கினான் என்ற பெருமை எதற்கு என்று எனக்கு புரியவில்லை,

பசுமையான குளிர் வனம், அழகான அருவி, கலகலவெண்று இருக்கும் பறவையினம், துள்ளிஓடும் விலங்கினம், அழகிய நதிகள் அந்த நதிகளில் துள்ளிதிரியும் மீன்கள், என்று அழகான ஒரு உலகம், ஆனால் நிலவின் ஒன்றுமே இல்லை கருஞ்சாம்பல் நிறமுள்ள தூசுகள், கருப்பும் பளுப்பும் கலந்த கற்கள் வேறு ஒன்றும் காணமுடியவில்லை, எங்கும் கும்மிருட்டு நல்ல பழுப்பு நிறத்தில் சூரியன் அங்கிருந்து வந்த கிரகணங்கள் எதுவும் சந்திரனை அடையவில்லை, வெறும் நெருப்பு பந்து மட்டும் தான் தெரிகிறது. நாம் தூரத்தில் இருந்து பார்த்த அழகான நிலா எங்கே, அங்கிருந்து பூமியை பார்த்தால் சோப்பு குமிழில் உருவான அழகிய பந்து போல் காட்சி அளிக்கிறது. ஒரு வேளை நரகம் என்பதும் இப்படித்தான் இருக்கும் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்றார். எனக்கு நல்ல வேளை செய்தே என்ற மன திருப்தி சாதாரனமாக எந்த பணியையும் சிறப்பாக முடிந்த பிறகு வரும் திருப்தி மற்றபடி எனக்கு வேறு ஒன்றும் இல்லை என்றார்.





விஞ்ஞானம் வென்று விட்டது ஆனால் மெய்ஞானம் இதை மிஞ்சிவிடும் அது இயற்கையின் கையில் இருக்கிறது என்றார்.

----------------------------

சில நேரங்களில் எனக்கு தோன்றும் நாம் ஓவராக செயல் படுகிறோமா என்று கூட , இயற்கை நமக்கு கொடுத்த கொடையை கொண்டு நாம் என்ன செய்ய முடியாது, ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். நிலவுப்பயணம் ஒரு மனித குல வரலாற்றில் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கள், இதை யாரும் மறுக்க முடியாது ஆனால் மனிதன் தன் மண்ணில் இன்னும் ஒரு நாட்டின் மீது பகை , ஒரு இனத்தின் மீது வேறொரு இனத்திற்கு பகை, நீ சிறியவன், நான் பெரியவன், கொலை, கொள்ளை, மானபங்கம், மனதால் வஞ்சித்தல், பசி, பட்டினி. என்ன நாம் நிலவிற்கு சென்றது ஒரு பெருமை தானா?

இதெல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கும் என்று சொன்னால் எது நாள் வரை, ஒரு புறம் மனிதம் பட்டினியால் இறந்து போன அன்னையின் உடலை சாப்பிடும் கொடுமை, ஒரு பகுதியில் டெக்னாலஜி என்ற பெயரில் கோடிகளை அள்ளிவீசும் கொள்கைகள், நாம் நிலவில் இறங்கினோம், அதனால் மனித குலத்திற்கு என்ன பயன்

பல்லாயிரம் ஆண்டுகளான வாணில் நிலவை பார்த்த மனிதன் அதில் என்ன இருக்கிறது என்று நேரில் பார்த்து விட்டு வந்துவிட்டான். ஆனால் நாளுக்கு நாள் அவனிடையே பெருகிவரும் பேதமையை மனதில் இருந்து எடுக்க மறுக்கின்றானே, நிலவு பயணம் ஒரு குழுக்கான தலைவர் இட்ட பணியை திறம்பட முடித்த திருப்தி மட்டும் தான் அதனால் மனித குலத்திற்கு என்ன பயன்?????????????

இன்னும்
நமக்குள் இறங்கி பார்க்கவில்லை


The kingdom of god cometh not with observation: neither shall they say, lo here! Or lo there! For behold, the Kingdom of god with you..... For as the lightning that lighteneth out of the one part under heaven shineth Unto the other part under heaven; so shell the son of man be in his day (luke: 17)

No comments: