குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள , அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும். எல்லாருக்கும் நன்றி.......!!!
Showing posts with label சுட்டது. Show all posts
Showing posts with label சுட்டது. Show all posts
Sunday, April 6, 2014
Monday, March 24, 2014
Saturday, February 26, 2011
RUN COMMANDS for use full
Common Tasks with Run
Below are a list of commands you can type into the Run dialog:
RUN COMMANDS | TYPE DIALOG |
Run Calculator | calc |
Run Command Prompt | cmd |
Run Firefox (if installed) | firefox |
Run Internet Explorer | iexplore |
Run Microsoft Word (if installed) | winword |
Run Microsoft Excel (if installed) | excel |
Run Microsoft Outlook (if installed) | outlook |
Run Notepad | notepad |
Run Wordpad | wordpad |
Open Control Panel | control panel |
Open Program Files folder | %programfiles% |
Shutdown Windows | shutdown |
Restart Windows | shutdown -r |
Log Off Windows | logoff |
Registry Editor | regedit |
Task Manager | taskmgr |
Windows Update Launches | Wupdmgr |
Infrequently Used Run Commands
Below are a list of commands you can type into the Run dialog, split into several categories: programs, control panels, computer administration tools, and special folders.
Programs
Character Map | charmap |
Check Disk Utility | chkdsk |
Clipboard Viewer | clipbrd |
Free Cell | freecell |
Hearts Card | mshearts |
Minesweeper | winmine |
On Screen Keyboard | osk |
Remote Desktop | mstsc |
Spider Solitare | spider |
Telnet Client | telnet |
Windows Magnifier | magnify |
Control Panels
Accessibility Controls | access.cpl |
Add Hardware Wizard | hdwwiz.cpl |
Add/Remove Programs | appwiz.cpl |
Administrative Tools | control admintools |
Automatic Updates | wuaucpl.cpl |
Date and Time | timedate.cpl |
Display Properties | desk.cpl |
Folders Properties | control folders |
Fonts | control fonts |
Fonts Folder | fonts |
Game Controllers | joy.cpl |
Internet Properties | inetcpl.cpl |
Keyboard Properties | control keyboard |
Mouse Properties | control mouse |
Network Connections | control net connections |
Network Setup Wizard | netsetup.cpl |
ODBC Data Source Administrator | odbccp32.cpl |
Password Properties | password.cpl |
Phone and Modem Options | telephon.cpl |
Power Configuration | powercfg.cpl |
Printers and Faxes | control printers |
Printers Folder | printers |
Regional Settings | intl.cpl |
Scanners and Cameras | sticpl.cpl |
Security Center | wscui.cpl |
Sounds and Audio | mmsys.cpl |
User Account Management | nusrmgr.cpl |
Windows Firewall | firewall.cpl |
Computer Administration Tools
Computer Management | compmgmt.msc |
Device Manager | devmgmt.msc |
Disk Cleanup Utility | cleanmgr |
Disk Defragment | dfrg.msc |
Disk Management | diskmgmt.msc |
Disk Partition Manager | diskpart |
Driver Verifier Utility | verifier |
Event Viewer | eventvwr.msc |
Group Policy Editor (XP Prof) | gpedit.msc |
Local Security Settings | secpol.msc |
Local Users and Groups | lusrmgr.msc |
Performance Monitor | perfmon |
Resultant Set of Policy | rsop.msc |
Scheduled Tasks | control schedtasks |
Services | services.msc |
Shared Folders | fsmgmt.msc |
System Configuration Editor | sysedit |
System Configuration Utility | msconfig |
Utility Manager | utilman |
Windows System Security Tool | syskey |
Computer Administration Tools
Application Data Folder | %appdata% |
Home Directory Drive | %homedrive% |
Home Directory | %homepath% |
Shared Home Directory | %homeshare% |
Temporary Folder | %temp% |
Windows Root Drive | %systemdrive% |
Windows Root Directory | %windir% |
Thursday, February 3, 2011
தமிழக மீனவன் - ஃபிளாஷ் விட்ஜெட்
தமிழக மீனவர்களுக்காக எப்போதும் இல்லாத அளவில் இணைய நண்பர்களிடையேயும் டிவிட்டர் தளத்திலும் ஒருமித்த குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தங்கள் குரலையும் ஒலிக்க செய்யும் விதத்தில் கீழ்கண்ட ஃபிளாஷ் விட்ஜெட்டினை உங்கள் வலைப்பூவில் இணைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி..!
Save TN Fisherman
Save TN Fisherman
குறிப்பு : தங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு கோடிங்கில் இருக்கும் 320 X 240 அளவை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
240 X 180 - 280 X 210 - 360 X 270 - 400 x 300 - 640 X 480
தங்கள் குரலையும் ஒலிக்க செய்யும் விதத்தில் கீழ்கண்ட ஃபிளாஷ் விட்ஜெட்டினை உங்கள் வலைப்பூவில் இணைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி..!
Save TN Fisherman
Save TN Fisherman
குறிப்பு : தங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு கோடிங்கில் இருக்கும் 320 X 240 அளவை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
240 X 180 - 280 X 210 - 360 X 270 - 400 x 300 - 640 X 480
Thursday, August 26, 2010
கருத்து வந்த buzz
பல பெயர்கள் எனக்குண்டு..
இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..ஈழத்தை நேசிப்பதால் புலி...
மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..ஈழத்தை நேசிப்பதால் புலி...
மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
Thursday, August 5, 2010
"NIMBOOZ "LEMON
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது.
வைரஸ் பெயர் : அதிகபடியான எலுபுருக்கி நோய்.. (high bone fever)
அல்லது
வேகபடியான எலுபுருக்கி நோய் ..
அரசங்கம சொல்லி கேக்காதவங்க....!!
நான் சொன்ன கேக்கவ போரிங்க.....!!
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது.
வைரஸ் பெயர் : அதிகபடியான எலுபுருக்கி நோய்.. (high bone fever)
அல்லது
வேகபடியான எலுபுருக்கி நோய் ..
அரசங்கம சொல்லி கேக்காதவங்க....!!
நான் சொன்ன கேக்கவ போரிங்க.....!!
Labels:
அனுபவம்,
கருத்து,
கருத்து கந்த சாமி,
சிந்தனை,
சுட்டது
Tuesday, August 3, 2010
இந்தியர்களே கவனத்திற்கு.......!!
பெட்ரோல் விலைகள் விவரம்:
நாடு விலை
ஆப்கானிஸ்தான் 36.00
பங்களாதேஷ் 22.00
பர்மா 30.00
கியூபா 19.00
நேபால் 34.00
கத்தார் 30.00
பாகிஸ்தான் 26.00
இந்தியா 56.00
அடிப்படை விலை ஒரு லிட்டர்க்கு 16.50
மத்திய வரி 11.80
அந்நிய செலவாணி 09.75
மாநில வரி 08.00
மதிப்பு குட்டு வரியின் செஸ் 04.00
மொத்தம் 50.05
இப்போ அதிகபடிய ரூபாயை 06.00 எங்க போகுது...!!
நல்ல அரசு பணி....!! வளர்க அவர் நிதிகொள்கை....!!!!
நாடு விலை
ஆப்கானிஸ்தான் 36.00
பங்களாதேஷ் 22.00
பர்மா 30.00
கியூபா 19.00
நேபால் 34.00
கத்தார் 30.00
பாகிஸ்தான் 26.00
இந்தியா 56.00
அடிப்படை விலை ஒரு லிட்டர்க்கு 16.50
மத்திய வரி 11.80
அந்நிய செலவாணி 09.75
மாநில வரி 08.00
மதிப்பு குட்டு வரியின் செஸ் 04.00
மொத்தம் 50.05
இப்போ அதிகபடிய ரூபாயை 06.00 எங்க போகுது...!!
நல்ல அரசு பணி....!! வளர்க அவர் நிதிகொள்கை....!!!!
Labels:
அனுபவம்,
கருத்து,
கருத்து கந்த சாமி,
சிந்தனை,
சுட்டது
Sunday, September 27, 2009
மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)
பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.அதே சமயத்தில், அலெக்சாந்தர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார். கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிந்தனையாளர்களைவிட அதிகப் பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.அலெக்சாந்தர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.நெப்போலியன், ஹ’ட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாந்தர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.அலெக்சாந்தரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாந்தரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாந்தருக்கு முன்பு, இந்த மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின. பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.அலெக்சாந்தர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹ“ராத், கந்தஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாந்தரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாந்தரின் செல்வாக்கைவிட மிகக் குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாந்தர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.
Saturday, September 26, 2009
அசோகர் (கி.மு. 300-கி.மு.232)
இந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர் மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும் பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன் முதலில் நிறுவினார்.அசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர் பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன் பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீர்படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், துர்பிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் துர்பிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.
அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீர்படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், துர்பிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் துர்பிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.
Friday, September 25, 2009
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், ஒப்புயர்வற்ற அறிஞராகவும் விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது சார்புக் கொள்கை க்காக (Theory of Relativity) உலகப் புகழ் பெற்றவர். இவர் வகுத்தமைத்த சார்புக் கொள்கையில் உண்மையில் இரு கொள்கைகள் அடங்கியுள்ளன. ஒன்று "சிறப்புச் சார்புக் கொள்கை" (Special Theory of Relativitiy) இது 1905 இல் வகுத்தமைக்கப்பட்டது. இன்னொன்று " பொதுச் சார்புக் கொள்கை" (General Theory of Relativity) இது 1915 இல் வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கொள்கையை ஐன்ஸ்டீனின் "ஈர்ப்பு விதி" (Law of Gravitation) என அழைப்பது பொருத்தமாக இருக்கும். இவ்விரு கொள்கைகளுமே மிகவும் சிக்கலானவை. எனவே, அவற்றை இங்கு விளக்கப் போவதில்லை. எனினும், சிறப்புச் சார்பில் குறித்துச் சில கருத்துகளைக் கூறுவது பொருத்தமாக இருக்கும்." எல்லாம் சார்புடையவை" என்பது நன்கறிந்த மூதுரை. இந்தத் தத்துவ வெற்றுரையை ஐன்ஸ்டீன் கொள்கை மீண்டும் கூறவில்லை. அறிவியல் அளவைகள் சார்புடையவை என்பதைத் துல்லியமான கணித சூத்திரமாக இவரது கொள்கை கூறுகிறது. காலம் மற்றும் இடம் பற்றிய அகநிலைப் புலனியல் காட்சிகள் யாவும் நோக்குபவரைப் பொருத்தது என்பது தெளிவாக உண்மை. ஆனால், ஐன்ஸ்டீனுக்கு முன்பு இந்த அகநிலைக் கருத்துகளின் பின்புலத்தில் உண்மையான தொலைவுகளும், வரம்பற்ற காலமும் இருப்பதாகவும், அவற்றைத் துல்லியமான கருவிகளைக் கொண்டு புறநோக்குடன் அளவிட முடியும் என்றும் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். வரம்பற்ற காலம் என்று எதுவும் இருப்பதை ஐன்ஸ்டீன் கொள்கை மறுத்து, அறிவியல் சிந்தனையைப் புரட்சிகரமாக மாற்றியது. காலம் மற்றும் இடம் பற்றிய நமது கருத்துகளை அவரது கொள்கை எவ்வாறு அடியோடு மாற்றியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூறலா"X' என்னும் ஒரு விண்வெளிக் கலம், வினாடிக்கு 1,00,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் கொள்வோம். விண்வெளிக் கலத்திலும், பூமியிலும் உள்ள நோக்கர்கள் இந்த வேகத்தை அளவிடுகிறார்கள். அவர்களது அளவீடுகள் ஒத்திருக்கின்றன. இதற்கிடையில் 'Y' என்னும் விண்வெளிக் கலம், "X' என்ற விண்வெளிக் கலம் செல்லும் அதே திசையில், ஆனால் அதைவிட அதிக வேகத்தில் செல்கிறது. பூமியிலுள்ள நோக்கர்கள் "Y' விண்வெளிக் கலத்தின் வேகத்தை அளவிடுங்கால், அது வினாடிக்கு 1,80,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் காண்கிறார்கள். "Y' விண்வெளிக் கலத்திலுள்ள நோக்கர்கள் அதே முடிவுக்குத் தான் வருவார்கள். இரு விண்வெளிக் கலங்களும் ஒரே திசையில் செல்வதால், அவற்றின் வேகங்களுக்கிடையிலான வேறுபாடு வினாடிக்கு 80,000 கிலோ மீட்டர் என்றும், வேகமாகச் செல்லும் கலம், மெதுவாகத் செல்லும் கலத்திலிருந்து இதன் வேக விகிதத்திலேயே விலகிச் செல்லும் என்றும் முடிவு கட்டத் தோன்றும். ஆனால், இரு விண்வெளிக் கலங்களிலிருந்தும் காட்சிப் பதிவீடுகளைச் செய்யும்போது, அந்த இரு கலங்களுக்குமிடையிலான தொலைவு வினாடிக்கு 80,000 கி.மீ. என்ற வீதத்தில் இல்லாமல், வினாடிக்கு 1,00,000 கி.மீ. என்ற வீதத்தில் அதிகரிப்பதை இரு கலங்களிலுமுள்ள நோக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள் என ஐன்ஸ்டீன் கொள்கை ஊகித்துரைக்கிறது.வெளித் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் போது, இந்த முடிவு பொருத்தமற்றதாகத் தோன்றலாம். இதில் ஏதேனும் சொல்லாட்சித் தந்திரம் இருக்கிறது என்ற ஐயம் ஏற்படக் கூடும்.இந்தச் சிக்கலில் சில முக்கிய விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய ஐயப்பாட்டுக்கு இடமேயில்லை. விண்வெளிக் கப்பல்களின் கட்டுமானமோ, அவற்றைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் விசைகளோ இந்த முடிவுகளுடன் ஒரு தொடர்பும் கொண்டிருக்கவில்லை. காட்சிப் பதிவீடுகளில் எவையேனும் தவறுகள் காரணமாகவும் இந்த முடிவுகள் ஏற்படவில்லை. அளவீடும் கருவிகளிலும் எவ்விதக் கோளாறும் இல்லை. ஏமாற்று வேலை எதுவும் இதில் கிடையாது. காலம் மற்றும் இடம் இரண்டின் அடிப்படை இயல்பின் விளைவாகவே மேற்சொன்ன முடிவு ஏற்பட்டதாக ஐன்ஸ்டீன் உறுதிபடக் கூறியுள்ளார். இவையெல்லாம் செயல்முறைக்கு ஒவ்வாத,. மட்டுமீறிய கோட்பாட்டியலானவை எனக் கருதத் தோன்றும். உண்மையைக் கூறின், நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு கற்பனைக் கருதுகோள் என்று சார்புக் கொள்கையைப் பல ஆண்டுகளாகப் பெரும்பாலோர் ஒதுக்கி வைத்திருந்தார்கள். 1945 ஆம் அண்டில் ஹிரோஷிமாவிலும், நாகசாகிலும் அணுகுண்டுகள் போடப்பட்ட பின்னர், இந்தத் தவற்றினை யாரும் செய்யவில்லை." பொருண்மையும், ஆற்றலும் ஒருவகையில் சரி நிகரானவை; அவற்றுக்கிடையிலான தொடர்பினை E= Mc2 என்னும் சூத்திரதின் மூலம் குறிப்பிடலாம். இதில் E என்பது ஆற்றல்; M என்பது பொருண்மை. C என்பது ஒரு பெரிய இலக்கம். அது வினாடிக்கு 1,68,000 கி.மீ. - க்குச் சமம். அதன் இருபடி வர்க்கம் (C2) இதைவிட மிகப்பெரிய இலக்கணமாகும். எனவே, பொருண்மையின் ஒரு சிறிய நுண்பகுதி ஓரளவு உருமாற்றம் பெற்றால் கூட அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தெளிவாகிறது.ஆனால், E=Mc2 என்ற சூத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு எவரும் ஓர் அணுமின் நிலையத்தை நிறுவி விடவோ இயலாது. அணு ஆற்றலை உருவாக்குவதில் வேறு பலரும் மிக முக்கியமான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கு மறந்துவிடலாகாது. இத்துறையில் ஐன்ஸ்டீனின் பங்கு தலையாயது என்பதை மறுப்பதற்கில்லை. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு 1939 இல் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அதில், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை விளக்கியிருந்தார். அத்துடன், ஜெர்மானியர்கள் அணுகுண்டு தயாரிப்பதற்கு முன்னதாக அமெரிக்கா தயாரித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்தக் கடிதம் தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தை அமெரிக்கா தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் முதலாவது அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. சிறப்புச் சார்பியல் மீது கடுமையான சர்ச்சை எழுந்தது. ஆனால், ஓர் அம்சத்தை மட்டும் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டார்கள். அதாவது " இதுகாறும் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் இது" என்பதே அது. ஆனால், ஐன்ஸ்டீன் " பொதுச் சார்புக் கொள்கை" இதை விடவும் திடுக்கிடத்தக்கதாக இருந்தது. ஈர்ப்பாற்றல் விளைவுகள், இயற்பியல் விசைகளின் காரணமாக ஏற்படுபவை" என்று ஐன்ஸ்டீனின் கொள்கை கூறுகிறது. இது உண்மையிலே அதிர்ச்சியூட்டிய ஒரு கொள்கையாகும்.! விண்வெளியிலுள்ள ஒரு வளைவை எவ்வாறு அளவிட முடியும்? விண்வெளி வளைந்திருக்கிறது எனக் கூறுவதே சரிதானா? ஐன்ஸ்டீன் தமது கொள்கையை வகுத்தமைத்துக் கூறியதுடன் நின்றுவிடவில்லை. அவர் தமது கொள்கையை தெள்ளத்தெளிவாக கணித வடிவத்தில் அமைத்தார். அதிலிருந்து, திட்டவட்டமான அனுமானங்களைச் செய்ய முடிந்தது. அந்த அனுமானங்கள் பரிசோதிக்கப்பட்டு உண்மையென மெய்ப்பிக்கப்பட்டன. முழுச்சூரிய கிரணங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பல பரிசோதனைகளிலிருந்து, ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் சரியானவை என்பது உறுதியாகியிருக்கிறது." பொதுச்சார்புக் கொள்கை" பல வகைகளில் மற்ற அறிவியல் விதிகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. முதலாவதாக, ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கையைக் கவனமான பரிசோதனைகளின் அடிப்படையில் வகுத்தமைக்கவில்லை. கிரேக்கத் தத்துவ ஞானிகளும், மத்திய காலத்திய அறிஞர்களும் செய்ய முயன்ற போது, செவ்வொழுங்கு (Symmetry) , கணித நேர்த்தி (Mathematical Elegance) ஆகியவற்றின் அடிப்படையிலான பகுத்தறிவுவாத ஆதாரங்களைக் கொண்டு தமது கொள்கையை வகுத்தமைத்தார். (இவ்வாறு செய்வதன் மூலம் நவீன அறிவியலின் அனுபவ முறைக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விலகிச் சென்றார்). ஆனால், அழகு செவ்வொழுங்கு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த கிரேக்கர்கள், பரிசோதனைகளுக்குத் தாக்குப் பிடிக்கவல்ல எந்திரவியல் கோட்பாடு ஒன்றை வகுத்தமைப்பதில் ஒரு போதும் வெற்றி பெறவில்லை. ஆனால், ஐன்ஸ்டீன் கொள்கை இது காறும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளிலும் வெற்றி கண்டிருக்கிறது. பொதுச் சார்புக் கொள்கையானது, அறிவியல் கோட்பாடுகள் அனைத்திலும் மிகவும் அழகானது, ஆற்றல் வாய்ந்தது. அறிவுக்கு முழு நிறைவளிக்கக் கூடியது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் அணுகுமுறைக்குச் சிறந்த வெற்றியாகும்.பொதுச் சார்புக் கொள்கை இன்னொரு அம்சத்திலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மற்ற அறிவியல் விதிகளில் பெரும்பாலானவை ஏறத்தாழத்தான் செல்லும்படியாகக் கூடியவை. அவை பல சூழ்நிலைகளில் சரியாக உள்ளன; ஆனால், எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக இருப்பதில்லை. நிலைகளிலும் சரியாகவே இருந்து வருகிறது. இதுகாறும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்தக் கொள்கை தவறாகிப் போனதில்லை; இந்தக் கொள்கைக்கு எதிர்காலப் பரிசோதனைகளில் இந்த அளவுக்கு வெற்றி கிட்டாமல் போகலாம். எனினும், இதுகாறும் விஞ்ஞானிகளால் வகுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளில், இறுதி உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது சார்புக் கொள்கை தான் என்பதில் ஐயமில்லை.ஐன்ஸ்டீன் தமது சார்புக் கொள்கைகளுக்காகப் புகழ் பெற்றுள்ள போதிலும், அவருடைய மற்ற அறிவியல் சாதனைகளும் விஞ்ஞானி என்ற முறையில் அவருக்குப் புகழ் தேடித் தந்திருக்கிறது. ஒளி மின் விளைவினை (Photo Electric Effect) அவர் விளக்கிக் கூறினார். இதற்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளக்கத்தில் "ஃபோட்டோன்" என்ற ஒளித்துகள் இருப்பதை அவர் கண்டறிந்து கூறினார். ஒளியில் மின்காந்த அலைகள் அடங்கியிருக்கின்றன என்றும், அலைகளும், துகள்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றும் நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் பழைய கொள்கையை ஐன்ஸ்டீனின் கொள்கை சிதறடித்து விட்டது. இவருடைய ஒளிமின் விளைவு விதி நடை முறையில் பெருமளவுக்குப் பயன்பாடுடையதாகியதுடன், ஒளித் துகள் பற்றி இவரது கருதுகோள் பேருதவியாக இருந்தது. இன்று கதிரியக்க அலைவீச்சுக் கோட்பாட்டின் ஓர் அங்கமாக இந்தக் கருதுகோள் விளங்குகிறது.ஐன்ஸ்டீனின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கால், அவரை ஐசக் நியூட்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஐசக் நியூட்டனின் கோட்பாடுகள், அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு எளிதானவை; இந்தக் கோட்பாடுகளை முதன் முதலில் உருவாக்கியதில் தான் அவருடைய அறிவாற்றல் அடங்கியுள்ளது. மாறாக, ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகள் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானவை. அவற்றை மிகக் கவனமாக விளக்கிக் கூறினால் கூட விளங்கிக் கொள்வது கடினம். அப்படி கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்; நியூட்டனின் சில கொள்கைகள் அவர் காலத்தில் நிலவிய அறிவியல் கொள்கைகளுடன் பெரிதும் முரண்பட்டிருந்த போதிலும் தனக்குத்தானே முரண்பாடாக இருக்கவில்லை. இதற்கு மாறாக, சார்புக் கொள்கையில் முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன. ஐன்ஸ்டீன் புகழ் பெறாதிருந்த குமரப் பருவத்திலேயே தமது கருது கோள்களை வகுத்தமைத்தார். அவை பரிசோதிக்கப்படாமல் இருந்தன. அவர் தமது கருதுகோள்களில் கண்டறிந்த முரண்பாடுகளால் மனச் சோ‘ர்வடையவில்லை. அக்கொள்கைகளை அவர் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. இந்த முரண்பாடுகளை அவர் தமது அறிவாற்றல் மூலம் மிகக் கவனமாக ஆராய்ந்தார். இந்த முரண்பாடுகள் தமது தவறினால் ஏற்பட்டவை அல்ல என்பதையும், அவை இயல்பாகவே உள்ளவை என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண்பதற்குரிய சரியான, நுட்பமான வழி உண்டு என்பதையும் அவர் கூறினார்.இன்று, ஐன்ஸ்டீனின் கொள்கை தான், நியூட்டனின் கொள்கையை விட அடிப்படையில் மிகவும் "துல்லியமானது" என்று நாம் கருதுகின்றோம். எனினும், இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீன் கீழ் மட்டத்தில் இடம் பெற்றிருப்பதேன்? ஏனென்றால் நியூட்டனின் கொள்கைகள் தான் நவீன அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் அடித்தளம் அமைத்தன. நவீனத் தொழில் நுட்பம் இன்றுள்ள அளவுக்கு முன்னேற்றமடைந்திருப்பதற்கு நியூட்டனின் கண்டுபிடிப்புகளே காரணம்; ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் காரணம் அல்ல.இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீனின் இடத்தைப் பாதிக்கின்ற மற்றொரு காரணமும் உண்டு; பெரும்பாலான தேர்வுகளில் ஒரு முக்கியமான கொள்கையை உருவாக்குவதில் பலர் பங்கு பெற்றிருக்கலாம். சமதர்ம தத்துவ வரலாறு, மின்விசை மற்றும் காந்த விசைக் கோட்பாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்த பெருமை முழுமையாக ஐன்ஸ்டீனைச் சேராது என்ற போதிலும் அதன் பெரும் பகுதிக்கு அவர் தகுதியுடையவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இதைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேறெந்தக் கொள்கையும் போலன்றி சார்புக் கொள்கைகளின் பெரும்பகுதி தனியொரு மனிதரின் அறிவுத் திறனால் உருவானது எனக் கூறுவது நியாயமானதாகும்.ஜெர்மனியிலுள்ள உல்ம் நகரில் 1879 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் பிறந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்நிலைக் கல்வி பயின்ற இவர் 1900 இல் இவர் பி.எச்.டி. பட்டம் பெற்றார்., இவர் ஆசிரியத் தொழிலில் ஈடுபட விரும்பினார். ஆனால், அப்போது இவருக்கு ஆசிரியர் வேலை எதுவும் கிடைக்க வில்லை. எனினும், அதே ஆண்டில் சிறப்புச் சார்பியல், ஒளி மின்விளைவு, பிரவுனியன் இயக்கக் கோட்பாடு ஆகியவை பற்றிய தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மிகச் சில ஆண்டுகளிலேயே இவரது இந்த ஆய்வுக் கட்டுரைகள்-முக்கியமாகச் சார்பியல் பற்றிய கட்டுரை-உலகில் தற்சிந்தனை வாய்ந்த தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கைகள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்தன. டார்வின் நீங்கலாக, தற்கால விஞ்ஞானிகளில் வேறு எவரும் ஐன்ஸ்டீனைப் போல் வாதத்திற்கிடமானவராக இருந்ததில்லை. எனினும், இவர் 1913 இல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதே சமயம், கெய்சர் வில்ஹெல்ம் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும், பிரஸ்ஸ’யன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். இந்தப் பதவிகள் தம் முழு நேரத்தையும் ஆராய்ச்சியில் செலவிட இவருக்குச் சுதந்திரமளித்தன.இந்தப் பதவிகளை இவருக்கு அளித்ததற்காக ஜெர்மன் அரசு வருந்துவதற்குக் காரணமே இல்லை. ஏனென்றால், இப்பதவிகளை ஏற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவர் பொதுச் சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார். 1921 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதி முழுவதிலும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெரும் புகழுடனேயே வாழ்ந்தார்.ஐன்ஸ்டீன் யூதராக இருந்ததால், ஜெர்மனியில் இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய நிலைமை நிலையற்றதாகியது. இவர் 1933 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டனில் குடியேறினார். அங்கு உயர் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் பணிபுரியலானார். 1940 இல் இவர் அமெரிக்கக் குடிமகன் ஆனார். ஐன்ஸ்டீனின் முதல் திருமணம் மணமுறிவில் முடிந்தது. இரண்டாம் திருமணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது; இவருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். இவர் 1955 இல் பிரின்ஸ்டனில் காலமானார். ஐன்ஸ்டீன் எப்பொழுதுமே தம்மைச் சுற்றியிருந்த மனித உலகில் அக்கறை காட்டி வந்தார். அரசியல் விவரங்கள் குறித்து அவர் அடிக்கடி தமது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அவர் அரசியல் கொடுங் கோன்மையைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் போர் ஒழிப்புக் கோட்பாட்டாளராகவும் விளங்கினார். யூதர் தாயக இயக்கத்தையும் அவர் தீவிரமாக ஆதரித்தார். உடைகள், சமூக மரபுகள் ஆகியவற்றில் அவர் தனிப் பாணிகளை கையாண்டார். அவர் நயமான நகைக்சுவை யுணர்வுடையவராகவும் மிகுந்த தன்னடக்கம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். வயலின் இசைப்பதிலும் அவர் ஓரளவு திறமை பெற்றிருந்தார். "இது போன்ற மிகச் சிறந்த அணிகலன் ஒன்றை மனித குலம் பெற்றதை எண்ணி மனிதர்கள் இறும்பூது எய்தலாம்" என்று நியூட்டனின் கல்லறையில் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த வாசகம் ஐன்ஸ்டீனுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்தும்.
Thursday, September 24, 2009
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)